Posts
மொழி, ஒற்றெழுத்தில் ஆழ்ந்த அர்த்தங்கள்
மொழி, ஒற்றெழுத்தில் ஆழ்ந்த அர்த்தங்கள் Aravind, Prem, Shan
ஆ - பசு - Cow
ஐ - அழகு - Beauty
தை - மாதம் - Stitch
பை - Bag
வை - keep
தா - Give
தீ - Fire
போ - Go
வா - Come
நீ - You
பூ - Flower
ஈ - Fly
மை - Ink
கோ - Leader
மா - mango
பா - பாட்டு
நா - நாக்கு
read more
Posts
அத்தை
🤱அத்தை🤱 💐💐💐💐💐💐💐
படித்தததில் பிடித்தது 👌 ⚖️👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾⚖️
பாசமலர் படத்துக்குப் போகும்போதே அழுதழுது தலைவலிக்கும் என்பதால் அனாசின் மாத்திரை வாங்கி முந்தானையில் முடிச்சிட்டு தியேட்டருக்கு கொண்டுபோன அத்தைகளிருந்தார்கள்.
எம்மகள கட்டிக்கடா மருமகனே என்றபடியே அண்ணன் மகன்களின் குஞ்சாமணியைத் தொட்டுக் கொஞ்சி முத்தமிட்ட அத்தைகளிருந்தார்கள்.
சின்னப் பாத்திரத்தில் கறித்துண்டுகள் நீந்தும் கோழிக்குழம்பை இடதுகையால் பிடித்து முந்தானைச்சேலையால் மூடிக் கொண்டுவந்து பையனுக்குக் கொடுங்க அண்ணி என்று கொடுத்துவிட்டுப் போன அத்தைகளிருந்தார்கள்.
மருமகன்களின் பிறந்த நாட்களில் அத்தை தரும் சில்லறைக் காசுகளை மறுதலித்தால் கண்கள் நிறைந்த அழுகையாய் மூக்குறிஞ்சியபடி காசை வாங்கிக்கடா என்று கெஞ்சிய அத்தைகளிருந்தார்கள்.
குளிக்க மறுத்து ஓடிப்போகும் அண்ணனின் சிறு மகன்களைத் துரத்திப்போய்ப் பிடித்து வந்து சிரிப்புக் காட்டி அம்மணமாய் நிறுத்தி எண்ணை தேய்த்துக் குளிக்க வைத்த அத்தைகளிருந்தார்கள்.
read more
Posts
அப்பாடக்கர்
அப்பாடக்கர் Latha Kumar நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா ? - சென்னை வட்டார வழக்கு
’ பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைபடத்தில் சந்தானம் பேசிய “நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா ?” என்ற வசனம் இளைஞர்கள் மத்தியில் வைரலானது. தற்போது நாம் கூட பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவது உண்டு. அப்பாடக்கர் காமெடிக்காக சொல்கின்ற வார்த்தையல்ல. அப்படி ஒருவர் உண்மையிலேயே வாழ்ந்து வந்தார் என்றால் நம்ப முடிகிறதா?
’ அப்பாடக்கர் ’ வார்த்தை உருவான சுவாரசிய கதை இதோ…
அமிர்தலல் விதல்தாஸ் தக்கர் (Amritlal Vithaldas Thakkar) என்பவர் மிக பெரிய சமூக சீர்திருத்தவாதி.
read more
Posts
ஆதியில் யானைகள் இருந்தன -நூல் விமர்சனம்
ஆதியில் யானைகள் இருந்தன -நூல் விமர்சனம் Latha Kumar
உலகத்திலேயே ஒப்புமை கூற முடியாத ஒரு பெரிய விலங்கு யானை. சங்ககால இலக்கியம் முதல் சமகால இயற்கை
வரை தவிர்க்க முடியாத ஒரு விலங்கினம் யானை என்பதை மிக விரிவாகவும் விளக்கமாகவும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிக எளிமையாக வாசிக்கும் விதத்தில் இந்தப் புத்தகத்தைப் படைத்திருக்கிறார் இயற்கை சூழலியலாளர், களப்பணியாளர், பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்ட ஆசிரியர் திரு. கோவை சதாசிவம் அவர்கள்.
‘காடு’ இதழில் முதலில் வெளிவந்து, பின் வாசகர்களின் வரவேற்பைப் பெற்று ‘ஆதியில் யானைகள் இருந்தன’ என்ற கட்டுரையின் முழு வடிவமே இந்தப் புத்தகம்.
read more
Posts
இரபீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள்
இரபீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் இன்று, மே 7, 1861 (- ஆகஸ்ட் 7 1941) Latha
💥💥💥💥💥
இந்தியத் துணைக்கண்டத்துக்கு வங்கக் கவி. இரபீந்திரநாத் தாகூர் இயற்றிய தேசிய கீதம் (National Anthem) வரிகள் இவை.
ஜன கண மன அதிநாயக ஜய கே பாரத பாக்கிய விதாதா. பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா திராவிட உத்கல வங்கா. விந்திய இமாச்சல யமுனா கங்கா உச்சல சலதி தரங்கா. தவ சுப நாமே சாகே, தவ சுப ஆசிச மாகே, காகே தவ ஜய காதா. சன கண மங்கள தாயக ஜயகே பாரத பாக்கிய விதாதா. ஜய கே, ஜய கே, ஜய கே, ஜய ஜய ஜய, ஜய கே.
read more
Posts
இலவந்தி
இலவந்தி shan
வானவர் மருள, மலை வில் பூட்டிய வானவர் தோன்றல், வாய் வாள் கோதை, விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து, இளங்கோவேண்மாளுடன் இருந்தருளி, ‘துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும் மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்’ என, பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி, வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன், இங்கு இலவந்தி என்பது ஒரு ஊரின் பெயரையோ அல்லது நகரின் பெயரையோ போன்று குறிப்பது போல் உள்ளது..
சேரன் செங்குட்டுவன் மலை வளம் காண்பது போன்று காட்சி தற்போது இந்த இலவந்தி என்ற ஊர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது…
Latha Kumar: இங்கு நீராவி மண்டபம் என்ற பொருளில் வருகிறது.
read more
Posts
உதிரும் சிறகுகள்
படித்ததில் பிடித்தது Indira
உதிரும் சிறகுகள்- கவிக்கோ அப்துல் ரகுமான்
மழை ஓய்ந்த முன்னிரவில் சாளரத்தின் வழியே அறையில் புகுந்து மின் விளக்கை மொய்த்து முட்டி மோதி சிறகுகள் உதிர்த்து விழும் ஈசல் கூட்டம் காலையில் திட்டியபடியே செத்த உடல்களோடு சிறகுகள் கூட்டிக் குப்பையில் எறிந்து - ஏதோ இருளை மோகித்து ஏதோ சாளரம் வழியே நுழைந்து சிறகுகள் உதிர்க்கப் போவோம் நாம். அரன் , அறண் yendra vaarthaigal irukirathaa?
Latha Kumar: அறன் அரண்
Meyyappan: Just to my knowledge, first is fort or protection. Second is moral principles or ethics
read more
Posts
உப்பு
உப்பு பற்றியும் இருக்கும்…நல்ல களஞ்சியம் அந்த புத்தகம் Swami: உப்பு சரி…உப்புமா பத்தி வரலாறு கிடைக்குமா??? 😁
Swami: உப்புமா Dish ..நமது பாரம்பரியமா..இல்லை அயலகத்திலிருந்து தொற்றிக் கொண்டதா?
இரும்பு சட்டியில் செய்த அரிசி உப்புமா..என்னோட Favorite..
உதிரி உதிரியாக ஒட்டாமல் செய்த சேமியா உப்புமா ல..தேங்காய துருவி மேல போட்டு சாப்பிட்டா சிறப்பாக இருக்கும்..
இஞ்சி தூக்கலாக போட்டு பிறு பிறு வென்று வறுத்த வேர்கடலை போட்ட கோதுமை ரவாஉப்புமா..ஒரு Plate fulla வைம்மா னு சொல்லும்…
read more
Posts
உரையாடல்
Shan: சிலம்பு தமிழ் மகிழ் மன்றத்திற்கு வணக்கம். நமது மொழி மற்றும் இலக்கிய தாகத்திற்கு இது நமக்கு ஒரு மற்றுமொரு புத்துணர்ச்சியான அருஞ்சுனையான களமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.. நிச்சயமாக முத்தமிழையும் முழுதாய் சுவைத்திட ஊர் கூடி தேர் இழுப்போம்.. சிலம்பின் தமிழ்ச் சமுதாயப் பணி தொடரட்டும்!
Vinoth: சிறப்பு, நன்றி
நாம் நம்மை கவர்ந்த 5 புத்தகம் . ஓர் இரு பாடல் (இலக்கியம் அல்லது தத்துவம்), போன்றவற்றை முதலில் பகிர்ந்து ஒரு அறிமுகம் செய்தல் நன்றாக இருக்கும். அதை தொடர்ந்து நமது சந்திப்பு (நேரில் பூங்கா அல்லது நூலகத்தில் ) செய்தால் நன்றாக இருக்கும்.
Shan: நன்றி.
read more
Posts
எழுத்தாளர் கா. அப்பாத்துரை
எழுத்தாளர் கா. அப்பாத்துரை Raj Uncle
வரலாற்றில் இன்று மே 26 - பன்மொழிப் புலவர் என அழைக்கப்படும் தமிழ் எழுத்தாளர் கா. அப்பாத்துரை 1989-ம் ஆண்டு இதே நாளில் மறைந்தார். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் “பன்மொழிப்புலவர்” என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.
read more