Posts
தமிழ்ப்பேரரசுகள்
❤️ தமிழ்ப்பேரரசுகள் ❤️ Latha Kumar
நேற்றைய வகுப்பில் மாணவர்களிடம், நீங்கள் அறிந்த பேரரசுகள் Empire Dynasty பெயர்களைக் கூறுங்கள் என்ற கேள்விக்கு, அவர்கள் பிரிட்டிஷ் எம்பயர், பிரஞ்சு எம்பயர், ரோமன் எம்பயர் என்று உலக பேரரசு பெயர்களைக் கூறினார்களே தவிர, தமிழ் பேரரசின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாறு பயிற்றுவிக்கப்பட வில்லை. ஏன் நாங்கள் படித்த காலத்தில் கூட அப்படியொரு கல்வி இருந்ததாக நினைவிலில்லை. சேர சோழ பாண்டியர் எனும் சொல்லாடல் மூன்று மன்னர்கள் என்று குறுகிய புரிதலை அந்தக் காலத்தில் ஏற்படுத்தியிருந்தது. இலக்கியங்களில் மன்னர்கள் பெயர்கள் வரும்போது, அதனை ஒரு பேரரசின் அங்கமாக நாம் பார்த்ததில்லை.
read more
Posts
தாவரத்தின் பிஞ்சு வகைகள்
தாவரத்தின் பிஞ்சு வகைகள் Shan
பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு
பிஞ்சு: இளம் காய்
வடு: மாம்பிஞ்சு
மூசு: பலாப்பிஞ்சு
கவ்வை: எள்பிஞ்சு
குரும்பை: தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
முட்டுக் குரும்பை: சிறு குரும்பை
இளநீர்: முற்றாத தேங்காய்
நுழாய்: இளம்பாக்கு
கருக்கல்: இளநெல்
கச்சல்: வாழைப்பிஞ்சு
இதை நாம் வெவ்வேறு ஊர்களில் வட்டார வழக்காக பயன்படுத்தி இருப்போம்.. எங்க ஊருல பலாப் பிஞ்சை பலா மூசு ணு தான் சொல்லுவோம்..
read more
Posts
திமில்
திமில் Shan: “நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை”என்பார். மீன் வேட்டத்துக்குச் சென்ற பரதவர், நிரை நிரையாகக் கட்டு மரங்களைக் கரை கொண்டு சேர்க்கும்போது ஏற்படும் ஆரவாரம் என்பது பொருள். - மதுரைக் காஞ்சி - பத்துப்பாடு- மாங்குடி மருதனார்..
Shan: திமில் என்ற சொல் சங்க இலக்கியங்களில் நிறைய இடங்களில் கையாளப்பட்டுள்ளது..
Shan: இதை வைத்து தானோ என்னவோ திமிங்கிலம் என்ற மீனுக்கு பெயர் காரணம் வந்துருக்குமோ..!?
Vinoth: i had the same feeling
Shan: இதில் இன்னொரு சொல் ஆராய்வுக்கு உட்பட்டது..
Shan: “கம்பலை”… கண்ணீரும் கம்பலையுமாக வந்தார்கள் என்று சொல்லுவம்ல..இதில் கம்பலை.
read more
Posts
திருநெல்வேலி வரலாறு
திருநெல்வேலி வரலாறு Latha Kumar
கி.பி.1790 செப்டம்பர் 1ல் இம்மாவட்டம் ஆங்கிலோயரால் உருவாக்கப்பட்டது. பிற்கால பாண்டியர்களின் தலைநகராகச் சிறிது காலம் இருந்தது.
வழிபாட்டு இடங்கள்: திருக்குறுங்குடி,சங்கரன்கோவில்,அகஸ்தியர்அருவி,வானமாமலை கோவில்,சொரிமுத்தைய்யன் கோவில்,திருமலைக்கோவில்,நெல்லையப்பர்கோவில்,உவரி சுயம்பு லிங்கசுவாமி,பாளையங்கோட்டை ஊசிக்கோபுரம்,விஸ்வநாதர் கோவில்,குற்றாலநாதர் கோவில்.
பெயர்க்காரணம்: இறைவனுடைய வழிபாட்டிற்க்காக உலர்த்திருந்த நெல்லை,ஊரெங்கும் மழை பொழிய நனையாமல் வேலியிட்டுக் காத்ததால் இப்பெயர் வந்தது.
நெல்லை தமிழ்: தென்பாண்டி சீமை என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும்.[1] இவ்வழக்கை நெல்லை தமிழ் என்றும் அழைப்பர்.
தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை.
read more
Posts
திருவிழா ஞானம் - 1
திருவிழா ஞானம்
Swami
“ஒன்னு வைச்சா பத்து, பத்து வைச்சா நூறு, நூறு வைச்சா ஆயிரம்..அரிஷ்டம் கொட்டும் ஆட்டம், ஆடாம போனாதான் நட்டம்” என திருவிழா பஜாரில் கோவில் ரதவீதியில் கூவிக் கொண்டிருந்தவன் எல்லாரையும் ஈர்த்துக்கொண்டிருந்தான் என்னையும் சேர்த்து.
பாக்கெட்டில் இருந்த நூறுரூபாய் என்னை அவனிடத்தில் கொண்டு போய் விட்டது.
அவன் மூணு சிவப்பு டம்ளரில் ஒன்னுல பச்சை பந்தை வச்சி..மூணையும் கவுத்தி மாத்தி மாத்தி தலை சுத்துற மாதிரி மந்திரித்துவிட்டு எதுல பந்துஇருக்குனு பெட் கட்டச் சொன்னான். நான் கண்ணுல விளக்கெண்ணை போட்டுலா பாத்தேன்.. நடுல உள்ளதுலதான் இருக்கு.
ஒருத்தனும் பெட் கட்டல..
அவன் பீடிய பத்தவைச்சிகிட்டே ஒவ்வொரு டம்ளரா நிமித்தினான்…நான் நினைச்சது கரெட்டு.
read more
Posts
திருவிழா ஞானம் - மூன்றாம் நாள்
திருவிழா ஞானம் - மூன்றாம் நாள் காலையிலே கோணாரு பால் கறக்க வரல போல. இல்லைனா எந்திரிக்கும் போது கருப்பட்டி காப்பி வாசம் நாசியில உள்ளபோயி நடு உச்சியிலே சிலுப்பிவிடும். சிக்கிரி கலந்த காப்பிதூளும் திசையன்விளை கருப்பட்டியும் காப்பியை தேடி அலைய வைக்கும். கோணார் வராட்டி நான்தான் போய் மடியில கைவைக்கனும். எலேய் மாட்டுக்கு கழனியும் ரெண்டு வைக்கலையும் போடு நான் போய் பல்லை உடைச்சிட்டு வறேனுட்டு உமிக்கரியையும் உப்பையும் கேலண்டர்ல தேதி கிழிச்ச தாளுல மடிச்சி தெக்க பம்புசெட்டைப்பாத்து போனேன். வாய் கொப்பளிக்கும் போதே இன்னைக்கு என்னலாம் பண்ணனும்னு மனசுக்குள்ள ஓட்டி பாத்துகிட்டேன். பல்லை தேச்சிட்டு கறவை மடில கை வைச்சதிலேருந்து பொழுது சாயுற வரைக்கும் வேலை தலைக்குமேல இருந்ததுல நேரம் போனதே தெரியல.
read more
Posts
திருவிழா ஞானம் - ரெண்டாம் நாள்
திருவிழா ஞானம் - ரெண்டாம் நாள்
முதல் நாள் திருவிழா தான் முடிஞ்சிருக்கு..இன்னும் ஒன்பது நாள் இருக்கு.
நேத்து ராத்திரி கனவுல பெரிசு திரும்பவும் வந்து பெட்டுல காசு கட்டி ஏமாந்து போகாதீங்களனு சொல்லிட்டு போனது உறுத்திகிட்டே இருக்கு. இன்னைக்கு பெட் கட்ட போகக்கூடாது. நேத்து போயி நூறு ரூவா வெட்டியா போயிட்டுனு மனசுக்குள்ளே நினைச்சிகிட்டே அன்னைய பொழுது கமிஷன் மண்டில மிளகாய் வந்த கணக்கை முடிச்சிட்டு சாயங்காலம் பொழுது சாயவும் ஹெர்குலிஸ் வண்டிய எடுத்துட்டு கிளம்பினேன்.
ஒரு ரவுண்டு சுத்திட்டு தெக்குரதவீதியிலஇருக்கிற செல்வம் மரக்கடையில ஆஸ்பெஸ்டாஸ் சாய்ப்புல சைக்கிள சாத்திட்டு பொடி நடையா திருவிழா கூட்டத்தில ஐக்கியமானேன்.
read more
Posts
தும்பி
தும்பி
Tamilvanan
Vinoth: சிறிது விளக்கம் கொடுத்தால் விவாதிக்க பயனுள்ளதாய் இருக்கும்
Vinoth: சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்த விழையாட்டு தும்பி பிடிப்பது. தட்டான் என்று நாங்கள் அழைப்போம். பட்டம் பூச்சி பிடிப்பதும் பட்டு பூச்சி பிடிப்பதும் கூட மிகவும் பிடித்த ஒரு பொழுது போக்கு.
இந்த முறை ஊர் சென்ற பொது பட்டு பூச்சிகளை தேடி பார்த்தேன் ஒன்று கூட கிடைக்க வில்லை. முற்றிலும் அழிந்து விட்டனனோ என்னவோ. மாறாக நிறைய மயில்களை பார்த்தேன். சிறு வயதில் மயில் பார்க்க ஒரே வழி சுவாமிமலை முருகன் கோவில்.
மயில்கள் அதிகமானதால் சில பயிர் வகைகளும் பூச்சிகளும், பாம்பினங்களும் பாதிக்கப்படுவதாக நண்பர்கள் விவாதிக்க கேட்டேன்
read more
Posts
தேத்தாங்க்கொட்டையை
தேத்தாங்க்கொட்டையை Shan
Shan: எங்க கிராமத்துல 80-90 கால கட்டத்துல கோடையில் ரொம்ப தண்ணி கஷ்டமா இருக்கும்.. அப்ப குளம் குட்டைல மழை பேஞ்ச தண்ணி கலங்களா கெடக்கும் . அதை தூக்கிட்டு வந்து இந்த தேத்தாங்க்கொட்டையை பானையில போட்டுடுவோம். அடுத்த நாளு தண்ணி சும்மா அப்படி சுத்தமாவும் சுவையாவும் இருக்கும். இப்ப எல்லாம் மினரல் வாட்டர் வண்டில கொண்டு வந்து குடம் 10 ரூ விக்கிறாங்க.. நாங்களும் அத வாங்குறோம்..
Indhira: தேற்றாங் கொட்டையின் ஆங்கில பெயர் என்ன ? Is is available everywhere?
Indhira: அத சொல்லுங்க .. கால போக்குல இந்த மாதிரியான விஷயம் எல்லாம் மறந்து மறைஞ்சு போயிடுமோன்னு கவலை வருது .
read more
Posts
தேத்தாங்க்கொட்டையை
தேத்தாங்க்கொட்டையை Shan
Shan: எங்க கிராமத்துல 80-90 கால கட்டத்துல கோடையில் ரொம்ப தண்ணி கஷ்டமா இருக்கும்.. அப்ப குளம் குட்டைல மழை பேஞ்ச தண்ணி கலங்களா கெடக்கும் . அதை தூக்கிட்டு வந்து இந்த தேத்தாங்க்கொட்டையை பானையில போட்டுடுவோம். அடுத்த நாளு தண்ணி சும்மா அப்படி சுத்தமாவும் சுவையாவும் இருக்கும். இப்ப எல்லாம் மினரல் வாட்டர் வண்டில கொண்டு வந்து குடம் 10 ரூ விக்கிறாங்க.. நாங்களும் அத வாங்குறோம்..
Indhira: தேற்றாங் கொட்டையின் ஆங்கில பெயர் என்ன ? Is is available everywhere?
Indhira: அத சொல்லுங்க .. கால போக்குல இந்த மாதிரியான விஷயம் எல்லாம் மறந்து மறைஞ்சு போயிடுமோன்னு கவலை வருது .
read more