தேத்தாங்க்கொட்டையை
தேத்தாங்க்கொட்டையை
Shan
Shan: எங்க கிராமத்துல 80-90 கால கட்டத்துல கோடையில் ரொம்ப தண்ணி கஷ்டமா இருக்கும்.. அப்ப குளம் குட்டைல மழை பேஞ்ச தண்ணி கலங்களா கெடக்கும் . அதை தூக்கிட்டு வந்து இந்த தேத்தாங்க்கொட்டையை பானையில போட்டுடுவோம். அடுத்த நாளு தண்ணி சும்மா அப்படி சுத்தமாவும் சுவையாவும் இருக்கும். இப்ப எல்லாம் மினரல் வாட்டர் வண்டில கொண்டு வந்து குடம் 10 ரூ விக்கிறாங்க.. நாங்களும் அத வாங்குறோம்..
Indhira: தேற்றாங் கொட்டையின் ஆங்கில பெயர் என்ன ? Is is available everywhere?
Indhira: அத சொல்லுங்க .. கால போக்குல இந்த மாதிரியான விஷயம் எல்லாம் மறந்து மறைஞ்சு போயிடுமோன்னு கவலை வருது ..
Shan: நம்ம விக்கி இந்த மாதிரி சொல்லுது.. https://en.m.wikipedia.org/wiki/Strychnos_potatorum
Latha Kumar: கடல் பயணம் செல்லும் போது அந்த உப்பு நீரை நன்னீராக்கவும் இதைத்தான் உபயோகித்தார்களா?
Latha Kumar: அருமையான பகிர்வுகள் 😀👏
Shan: இது உப்பு தண்ணிய நல்ல தண்ணியா மாத்தாது..
Gopikrishnan Venkatesan: அப்படி தான் ஒரிசா பாலு கூறுகிறார். இத்தோடு வேறு சில விதைகள் கொண்டு கடல் நீரை, குடி நீராக மாற்றி இருக்கிறார்கள்.
Gopikrishnan Venkatesan: https://youtu.be/EcEzGyMopXg
Shan: சிறப்பு!!. அவர் இதை எந்த தரவை வைத்து கூறுகின்றார் என்று தெரியவில்லை. அதற்கான குறிப்பை விளக்கி இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் நாமும் அறிந்து இருக்கலாம். தேற்றாங்கொட்டை என்பது மண் கலந்த மற்றும் கலங்கிய நீரை என்றே சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழரின் வரலாற்றை சங்க இலக்கியத்துடன் ஒப்பிட்டே அந்த கூற்றை நிறுவ முயல்கின்றோம். இன்னும் மேலதிக தரவுகள் இருந்தால் சிறப்பாக இருக்கும்!
Latha Kumar: இவர் கடல் ஆய்வாளர்.