<?xml version="1.0" encoding="utf-8" standalone="yes"?>
<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom">
  <channel>
    <title>Posts on கழல்கள்</title>
    <link>https://kazhalgal.silambu.us/posts/</link>
    <description>Recent content in Posts on கழல்கள்</description>
    <generator>Hugo -- gohugo.io</generator>
    <language>en-us</language>
    <lastBuildDate>Sun, 26 Nov 2023 16:49:12 +0000</lastBuildDate>
    <atom:link href="https://kazhalgal.silambu.us/posts/index.xml" rel="self" type="application/rss+xml" />
    <item>
      <title>மொழி, ஒற்றெழுத்தில் ஆழ்ந்த அர்த்தங்கள்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/44_post/</link>
      <pubDate>Sun, 26 Nov 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/44_post/</guid>
      <description>மொழி, ஒற்றெழுத்தில் ஆழ்ந்த அர்த்தங்கள் Aravind, Prem, Shan
ஆ - பசு - Cow
ஐ - அழகு - Beauty
தை - மாதம் - Stitch
பை - Bag
வை - keep
தா - Give
தீ - Fire
போ - Go
வா - Come
நீ - You
பூ - Flower
ஈ - Fly
மை - Ink
கோ - Leader
மா - mango
பா - பாட்டு
நா - நாக்கு</description>
    </item>
    <item>
      <title>அத்தை</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/38_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/38_post/</guid>
      <description>🤱அத்தை🤱 💐💐💐💐💐💐💐
படித்தததில் பிடித்தது 👌 ⚖️👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾⚖️
பாசமலர் படத்துக்குப் போகும்போதே அழுதழுது தலைவலிக்கும் என்பதால் அனாசின் மாத்திரை வாங்கி முந்தானையில் முடிச்சிட்டு தியேட்டருக்கு கொண்டுபோன அத்தைகளிருந்தார்கள்.
எம்மகள கட்டிக்கடா மருமகனே என்றபடியே அண்ணன் மகன்களின் குஞ்சாமணியைத் தொட்டுக் கொஞ்சி முத்தமிட்ட அத்தைகளிருந்தார்கள்.
சின்னப் பாத்திரத்தில் கறித்துண்டுகள் நீந்தும் கோழிக்குழம்பை இடதுகையால் பிடித்து முந்தானைச்சேலையால் மூடிக் கொண்டுவந்து பையனுக்குக் கொடுங்க அண்ணி என்று கொடுத்துவிட்டுப் போன அத்தைகளிருந்தார்கள்.
மருமகன்களின் பிறந்த நாட்களில் அத்தை தரும் சில்லறைக் காசுகளை மறுதலித்தால் கண்கள் நிறைந்த அழுகையாய் மூக்குறிஞ்சியபடி காசை வாங்கிக்கடா என்று கெஞ்சிய அத்தைகளிருந்தார்கள்.
குளிக்க மறுத்து ஓடிப்போகும் அண்ணனின் சிறு மகன்களைத் துரத்திப்போய்ப் பிடித்து வந்து சிரிப்புக் காட்டி அம்மணமாய் நிறுத்தி எண்ணை தேய்த்துக் குளிக்க வைத்த அத்தைகளிருந்தார்கள்.</description>
    </item>
    <item>
      <title>அப்பாடக்கர்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/35_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/35_post/</guid>
      <description>அப்பாடக்கர் Latha Kumar நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா ? - சென்னை வட்டார வழக்கு
&amp;rsquo; பாஸ் என்கிற பாஸ்கரன்&amp;rsquo; திரைபடத்தில் சந்தானம் பேசிய &amp;ldquo;நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா ?&amp;rdquo; என்ற வசனம் இளைஞர்கள் மத்தியில் வைரலானது. தற்போது நாம் கூட பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவது உண்டு. அப்பாடக்கர் காமெடிக்காக சொல்கின்ற வார்த்தையல்ல. அப்படி ஒருவர் உண்மையிலேயே வாழ்ந்து வந்தார் என்றால் நம்ப முடிகிறதா?
&amp;rsquo; அப்பாடக்கர் &amp;rsquo; வார்த்தை உருவான சுவாரசிய கதை இதோ&amp;hellip;
அமிர்தலல் விதல்தாஸ் தக்கர் (Amritlal Vithaldas Thakkar) என்பவர் மிக பெரிய சமூக சீர்திருத்தவாதி.</description>
    </item>
    <item>
      <title>ஆதியில் யானைகள் இருந்தன -நூல் விமர்சனம்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/29_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/29_post/</guid>
      <description>ஆதியில் யானைகள் இருந்தன -நூல் விமர்சனம் Latha Kumar
உலகத்திலேயே ஒப்புமை கூற முடியாத ஒரு பெரிய விலங்கு யானை. சங்ககால இலக்கியம் முதல் சமகால இயற்கை
வரை தவிர்க்க முடியாத ஒரு விலங்கினம் யானை என்பதை மிக விரிவாகவும் விளக்கமாகவும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிக எளிமையாக வாசிக்கும் விதத்தில் இந்தப் புத்தகத்தைப் படைத்திருக்கிறார் இயற்கை சூழலியலாளர், களப்பணியாளர், பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்ட ஆசிரியர் திரு. கோவை சதாசிவம் அவர்கள்.
&amp;lsquo;காடு&amp;rsquo; இதழில் முதலில் வெளிவந்து, பின் வாசகர்களின் வரவேற்பைப் பெற்று &amp;lsquo;ஆதியில் யானைகள் இருந்தன&amp;rsquo; என்ற கட்டுரையின் முழு வடிவமே இந்தப் புத்தகம்.</description>
    </item>
    <item>
      <title>இரபீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/5_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/5_post/</guid>
      <description>இரபீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் இன்று, மே 7, 1861 (- ஆகஸ்ட் 7 1941) Latha
💥💥💥💥💥
இந்தியத் துணைக்கண்டத்துக்கு வங்கக் கவி. இரபீந்திரநாத் தாகூர் இயற்றிய தேசிய கீதம் (National Anthem) வரிகள் இவை.
ஜன கண மன அதிநாயக ஜய கே பாரத பாக்கிய விதாதா. பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா திராவிட உத்கல வங்கா. விந்திய இமாச்சல யமுனா கங்கா உச்சல சலதி தரங்கா. தவ சுப நாமே சாகே, தவ சுப ஆசிச மாகே, காகே தவ ஜய காதா. சன கண மங்கள தாயக ஜயகே பாரத பாக்கிய விதாதா. ஜய கே, ஜய கே, ஜய கே, ஜய ஜய ஜய, ஜய கே.</description>
    </item>
    <item>
      <title>இலவந்தி</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/10_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/10_post/</guid>
      <description>இலவந்தி shan
வானவர் மருள, மலை வில் பூட்டிய வானவர் தோன்றல், வாய் வாள் கோதை, விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து, இளங்கோவேண்மாளுடன் இருந்தருளி, ‘துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும் மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்’ என, பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி, வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன், இங்கு இலவந்தி என்பது ஒரு ஊரின் பெயரையோ அல்லது நகரின் பெயரையோ போன்று குறிப்பது போல் உள்ளது..
சேரன் செங்குட்டுவன் மலை வளம் காண்பது போன்று காட்சி தற்போது இந்த இலவந்தி என்ற ஊர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது…
Latha Kumar: இங்கு நீராவி மண்டபம் என்ற பொருளில் வருகிறது.</description>
    </item>
    <item>
      <title>உதிரும் சிறகுகள்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/15_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/15_post/</guid>
      <description>படித்ததில் பிடித்தது Indira
உதிரும் சிறகுகள்- கவிக்கோ அப்துல் ரகுமான்
மழை ஓய்ந்த முன்னிரவில் சாளரத்தின் வழியே அறையில் புகுந்து மின் விளக்கை மொய்த்து முட்டி மோதி சிறகுகள் உதிர்த்து விழும் ஈசல் கூட்டம் காலையில் திட்டியபடியே செத்த உடல்களோடு சிறகுகள் கூட்டிக் குப்பையில் எறிந்து - ஏதோ இருளை மோகித்து ஏதோ சாளரம் வழியே நுழைந்து சிறகுகள் உதிர்க்கப் போவோம் நாம். அரன் , அறண் yendra vaarthaigal irukirathaa?
Latha Kumar: அறன் அரண்
Meyyappan: Just to my knowledge, first is fort or protection. Second is moral principles or ethics</description>
    </item>
    <item>
      <title>உப்பு</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/2d-post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/2d-post/</guid>
      <description>உப்பு பற்றியும் இருக்கும்&amp;hellip;நல்ல களஞ்சியம் அந்த புத்தகம் Swami: உப்பு சரி&amp;hellip;உப்புமா பத்தி வரலாறு கிடைக்குமா??? 😁
Swami: உப்புமா Dish ..நமது பாரம்பரியமா..இல்லை அயலகத்திலிருந்து தொற்றிக் கொண்டதா?
இரும்பு சட்டியில் செய்த அரிசி உப்புமா..என்னோட Favorite..
உதிரி உதிரியாக ஒட்டாமல் செய்த சேமியா உப்புமா ல..தேங்காய துருவி மேல போட்டு சாப்பிட்டா சிறப்பாக இருக்கும்..
இஞ்சி தூக்கலாக போட்டு பிறு பிறு வென்று வறுத்த வேர்கடலை போட்ட கோதுமை ரவாஉப்புமா..ஒரு Plate fulla வைம்மா னு சொல்லும்&amp;hellip;</description>
    </item>
    <item>
      <title>உரையாடல்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/3_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/3_post/</guid>
      <description>Shan: சிலம்பு தமிழ் மகிழ் மன்றத்திற்கு வணக்கம். நமது மொழி மற்றும் இலக்கிய தாகத்திற்கு இது நமக்கு ஒரு மற்றுமொரு புத்துணர்ச்சியான அருஞ்சுனையான களமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.. நிச்சயமாக முத்தமிழையும் முழுதாய் சுவைத்திட ஊர் கூடி தேர் இழுப்போம்.. சிலம்பின் தமிழ்ச் சமுதாயப் பணி தொடரட்டும்!
Vinoth: சிறப்பு, நன்றி
நாம் நம்மை கவர்ந்த 5 புத்தகம் . ஓர் இரு பாடல் (இலக்கியம் அல்லது தத்துவம்), போன்றவற்றை முதலில் பகிர்ந்து ஒரு அறிமுகம் செய்தல் நன்றாக இருக்கும். அதை தொடர்ந்து நமது சந்திப்பு (நேரில் பூங்கா அல்லது நூலகத்தில் ) செய்தால் நன்றாக இருக்கும்.
Shan: நன்றி.</description>
    </item>
    <item>
      <title>எழுத்தாளர் கா. அப்பாத்துரை</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/17_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/17_post/</guid>
      <description>எழுத்தாளர் கா. அப்பாத்துரை Raj Uncle
வரலாற்றில் இன்று மே 26 - பன்மொழிப் புலவர் என அழைக்கப்படும் தமிழ் எழுத்தாளர் கா. அப்பாத்துரை 1989-ம் ஆண்டு இதே நாளில் மறைந்தார். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் &amp;ldquo;பன்மொழிப்புலவர்&amp;rdquo; என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.</description>
    </item>
    <item>
      <title>கம்பன் புதிய பார்வை</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/8_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/8_post/</guid>
      <description>புத்தக வாசிப்புத் தொடர் - (மார்ச் வாசிப்பு மாரத்தான்) வாசகரின் பெயர்: லதா குமார்
வாசகரின் ஊர்/ மாநிலம்: நோவாய்,மிச்சிகன் (Novi MI)
புத்தகத்தின் பெயர்: கம்பன் புதிய பார்வை
எழுத்தாளர்: அ.ச.ஞானசம்பந்தன்
பக்கங்கள்: 409
கம்பராமாயணம் பற்றிய பக்திசார்ந்த மரபான பார்வையை மாற்றி அதை சமூகவியல், உளவியல் ஒழுக்கவியல் கோணத்தில் அணுகிய நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
1985 ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
இந்நூல் &amp;hellip;
கம்பனுக்கு மூலம் யார்? கம்பனுக்கு முன் பக்தி இயக்கம் கம்பனின் அரிமா நோக்கு கம்பன் கண்ட நாடு கம்பன் கண்ட மன்னன் கடவுள் மனிதனாகப் பிறந்தால் கம்பன் கண்ட பரம்பொருள் கவிக்கு நாயகர் கம்பன் கண்ட விழுப்பொருள்</description>
    </item>
    <item>
      <title>கவிதை</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/16_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/16_post/</guid>
      <description>கவிதை Thamilvanan
நேற்று போல் இல்லை நீ நேற்று போல் இல்லை நான் நேற்று போல் இருக்கிறது நம் காதல்! ~க. சரவணன்</description>
    </item>
    <item>
      <title>கவிதை</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/19_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/19_post/</guid>
      <description> Shan
கங்கு கரை காணா(நா)த காதலால் தங்கும் நீரை காண(நா)த புலவரே.. பூமாலை சூடி கணையாழி இட்டவரை பாமாலையால் பாடாமல் ஓங்கு கழியெடுத்து தேங்கு - நீர் அடைப்பை திறம்பட அகற்றி - சதா சாடை பேசமால் சாந்தமாக்கிடுங்க! </description>
    </item>
    <item>
      <title>கவிதை</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/40_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/40_post/</guid>
      <description>கவிதை Vinoth
கடைசி பேன்ஞ் முதல் பென்ஞ் என்பதை கூட தீன்டாமையாய் கருதும் நான் அமர எல்லா பென்ஞ் நண்பரும் காத்திருப்பர்.
எப்போதும் நேரம் தவராமல் லேட்டாய் வரும் நான் அமர தோழர்கள் மட்டும் அல்ல தோழிகளும் இடம் தருவதுன்டு. ஆண்பென் இருவருக்கும் பிடித்த புலிப்பு மிட்டாய் பேச்சுக்கு காத்திருக்கும் ஒரு கூட்டம்.
நான் உரங்கா அரைகள் இல்லை, ஞயிரு மட்டும் போன் பேசும் அப்பா காத்திருந்தால் 3 ரூபாய் செலவாகும் என்பதால் வாச்மேன் உடன் உரையாடலுடன் 5 மனிக்கு வாரத்தை துவங்கும் நான், பேசாத நண்பனின் தந்தைகள் இல்லை, தட்டாத கதவுகள் இல்லை.
புகை பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படதால் மைதானத்தில் இயர்க்கையுன் இல்லாமல் குளியல் அரையில் தம் அடித்கும் புரட்சிப்படையின் தளபதி நான் செல்லாத இடம் என்றும் எதுவும் இல்லை கல்லூரி விடுதியில்</description>
    </item>
    <item>
      <title>கழல்கள் சந்திப்பு</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/28_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/28_post/</guid>
      <description>கழல்கள் சந்திப்பு இன்று திருமதி மது அவர்களின் அறிமுகத்துடன் உரையாடல் துவங்கியது. அவரின் அனுபவம் மற்றும் தமிழ் பற்று எங்களை மிரள்ச்சி அடைய செய்தாலும். அவரின் கனிவான சொல்லாடல் மிகவும் உற்சாகம் தருவதாய் இருந்தது.
நம்மில் சிலர் கதை கேட்க பேரவா கொண்டிருப்பதை போல் அவர் கதை படைப்பது மற்றும் சொல்வதில் அனுபவம் மிக்கவர். அவரை குழுவில் இணைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். 🙏🙏🙏
பின் திரு சன்முகம் அவர்களின் வவ முன் எடுப்பை பற்றிய சிரிய உரை மற்றும் அவரின் கவிதை (இங்கு பதிவில் உள்ளது).
வவ வட்டார வழக்குகளை குரல் (ஒலி) வடிவில் தொகுக்கும் முயற்சி. மேலும் விவரங்களை தனியாக பின் ஒரு நாள் இணைக்கிறேன்.</description>
    </item>
    <item>
      <title>கழல்கள் சந்திப்பு – இளமை நினைவுகள்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/39_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/39_post/</guid>
      <description>கழல்கள் சந்திப்பு – இளமை நினைவுகள் 7/15/23
Shan: இன்றைய சந்திப்பு அருமை மற்றும் இனிமை.. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி♥️🙏🙏🙏
Vinoth: எதைப்பற்றி உரையாடுவது என்னும் குழப்பதில் துவங்கி நேரம் போதவில்லை என்ற ஏக்கத்தில் முடிந்த இந்த சந்திப்பு.
கழல்கள் குழுவை உருவாக்கியதின் குறிக்கோளை பறைசாற்றும் வண்ணம் இருந்தது மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏
RAMCHANDAR M: நினைவலைகளில் நீந்தச்செய்துவிட்டது.. நண்பர்களின் அனுபவப்பகிர்வுகள்
Shan: இன்றைய உரையாடலில் கீரிப்பிள்ளையையும் பற்றி கலந்துரையாடினோம். லதா டீச்சர் பாம்பு கீரிக் கதை சிலப்பதிகாரத்தில் வருது என்று மேலதிக தகவலை பகிர்ந்தார்கள்.. ♥️♥️
Shan: நமது சேர இளவல் இளங்கோ கீரி பிள்ளையை “பிள்ளை நகுலம்” என்று மிக அழகாக குறிப்பிடுகின்றார்👌</description>
    </item>
    <item>
      <title>கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/24_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/24_post/</guid>
      <description>கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!! இன்றைய சிந்தனை Raj Uncle
பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.
குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல.
எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.</description>
    </item>
    <item>
      <title>சிலம்பு முதல் ஆண்டு விழா </title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/33_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/33_post/</guid>
      <description>சிலம்பு முதல் ஆண்டு விழா Shan
வணக்கம்!. நம் சிலம்பு பள்ளி மனதை மயக்கும் மழலை போன்று அழகாய் தவழ்ந்து , நிமிர்ந்து, நடந்து தனது முதல் ஆண்டு விழாவையும் மற்றும் முதல் பட்டமளிப்பு விழாவையும் இனிதே கொண்டாடி மகிழ்ந்தது. நம் குழந்தை செல்வங்களும் மகிழ்ச்சியுடன் தங்களது தமிழ் வகுப்புகளை நிறைவு செய்துள்ளார்கள். அவர்களுடைய கோடை விடுமுறையை பயனுள்ளதாக இருக்க நம் “சிலம்பின் கழல்கள்”மூலம் குறுகிய கால கோடை கால தமிழ் சிறப்பு வகுப்புகளை நிகழ் நிலை மூலம் நடத்தலாம். அது அவர்களுடைய தமிழ் கற்றலை தொடரச் செய்து மென்மேலும் சிறக்க உதவிடும்.
உதாரணமாக:- திருக்குறள் ( குறளும் விளக்கமும் கதைகளுடன்) தமிழ் சொற்கள் வினாடி வினா தமிழ் கையெழுத்துப் பயிற்சி மேலும் நம்முடைய அணியின் அனைவரது கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றது.</description>
    </item>
    <item>
      <title>சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/7_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/7_post/</guid>
      <description>புத்தக வாசிப்புத் தொடர் - (மார்ச் வாசிப்பு மாரத்தான்) வாசகரின் பெயர்: லதா குமார்
வாசகரின் ஊர்/ மாநிலம்: நோவாய்,மிச்சிகன் (Novi MI)
புத்தகத்தின் பெயர்: சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?
எழுத்தாளர்: சிவசங்கரி
பக்கங்கள்: 181
திருமதி சிவசங்கரி அவர்கள் எழுதிய கட்டுரைகளில் இது எனக்கு மிகவும் பிடித்தது. சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?
குறைகளை மட்டுமே நம்பி நம் நிறைகளை காணத் தவறிய உள்ளங்களுக்கு &amp;hellip;
சத்தியமாய் வெளிச்சமும், இருளும், காற்றும், புழுக்கமும்; தைரியமும், கோழைத்தனமும்; தன்னம்பிக்கையும், மனச்சோர்வும்; நிம்மதியும், உளைச்சலும் நமக்குள்ளேதான் இருக்கின்றன.
இதை உணராமல், உணர முடியாமல், கோபமும், தாபமும், வேதனையும், வலியும், ஆங்காரமும, ஆற்றாமையும், அறிவீனமும், பலவீனமும் துவக்கத்தில் சன்னமான நூல் இழைகளாய் நம்மை பின்னி பிணைக்கவும், பிற்பாடு அவையே நம்மை மண்ணோடு மண்ணாய் புதைக்கும் வலிமை பெற்ற கனமான இரும்பு சங்கிலிகளாய் மாறவும் இடம் கொடுத்தால், நஷ்டம் யாருக்கு?</description>
    </item>
    <item>
      <title>தமிழ் எனும் அமுது</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/37_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/37_post/</guid>
      <description>தமிழ் எனும் அமுது Latha Kumar
காய்கறிக்கடை ஒன்றில்&amp;hellip;.
&amp;ldquo;கிள்ளிப் பார்க்காதீர் கிழங்கை&amp;rdquo; என்றாள்..!
&amp;ldquo;அப்படியொன்றும்
வயதாகி விடவில்லை..
என் கை இளங்கைதான்&amp;rdquo; என்றேன்..
அவள் முறைப்புக்கு இடையே
&amp;ldquo;என்ன இது, கொத்து மல்லி வாசமே இல்லை?&amp;rdquo; என்றேன்&amp;hellip;
&amp;ldquo;ம்&amp;hellip;இது காலை நேரம்
அதனால் பூக்க வில்லை &amp;quot;
எனச் சிரித்தாள்.
ஆனால் அந்தச் சிரிப்பில்
அதிகாலையிலே அழகாய்
மல்லி பூத்திருந்தது.
சித்தம் சூடேற்றும் அவள்
கண்களைப் பார்த்துக் கொண்டே&amp;hellip;
&amp;ldquo;முத்தம் தரும் காய் உண்டோ&amp;hellip;?&amp;rdquo;
என்றேன்&amp;hellip;
&amp;ldquo;என்ன என்ன&amp;rdquo; என்று அதட்டினாள்&amp;hellip;
&amp;ldquo;முத்துக்கள் ஒளிந்திருக்கும்
வெண்டைக் காயைச் சொன்னேன்&amp;rdquo;
என்றேன்&amp;hellip;
&amp;ldquo;வெண்டையில்லை
வெட்டும் காயிருக்கிறது
வேண்டுமா? &amp;quot; என்றாள்.</description>
    </item>
    <item>
      <title>தமிழ்ப்பேரரசுகள்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/9_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/9_post/</guid>
      <description>❤️ தமிழ்ப்பேரரசுகள் ❤️ Latha Kumar
நேற்றைய வகுப்பில் மாணவர்களிடம், நீங்கள் அறிந்த பேரரசுகள் Empire Dynasty பெயர்களைக் கூறுங்கள் என்ற கேள்விக்கு, அவர்கள் பிரிட்டிஷ் எம்பயர், பிரஞ்சு எம்பயர், ரோமன் எம்பயர் என்று உலக பேரரசு பெயர்களைக் கூறினார்களே தவிர, தமிழ் பேரரசின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாறு பயிற்றுவிக்கப்பட வில்லை. ஏன் நாங்கள் படித்த காலத்தில் கூட அப்படியொரு கல்வி இருந்ததாக நினைவிலில்லை. சேர சோழ பாண்டியர் எனும் சொல்லாடல் மூன்று மன்னர்கள் என்று குறுகிய புரிதலை அந்தக் காலத்தில் ஏற்படுத்தியிருந்தது. இலக்கியங்களில் மன்னர்கள் பெயர்கள் வரும்போது, அதனை ஒரு பேரரசின் அங்கமாக நாம் பார்த்ததில்லை.</description>
    </item>
    <item>
      <title>தாவரத்தின் பிஞ்சு வகைகள்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/4_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/4_post/</guid>
      <description>தாவரத்தின் பிஞ்சு வகைகள் Shan
பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு
பிஞ்சு: இளம் காய்
வடு: மாம்பிஞ்சு
மூசு: பலாப்பிஞ்சு
கவ்வை: எள்பிஞ்சு
குரும்பை: தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
முட்டுக் குரும்பை: சிறு குரும்பை
இளநீர்: முற்றாத தேங்காய்
நுழாய்: இளம்பாக்கு
கருக்கல்: இளநெல்
கச்சல்: வாழைப்பிஞ்சு
இதை நாம் வெவ்வேறு ஊர்களில் வட்டார வழக்காக பயன்படுத்தி இருப்போம்.. எங்க ஊருல பலாப் பிஞ்சை பலா மூசு ணு தான் சொல்லுவோம்..</description>
    </item>
    <item>
      <title>திமில்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/12_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/12_post/</guid>
      <description>திமில் Shan: “நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை”என்பார். மீன் வேட்டத்துக்குச் சென்ற பரதவர், நிரை நிரையாகக் கட்டு மரங்களைக் கரை கொண்டு சேர்க்கும்போது ஏற்படும் ஆரவாரம் என்பது பொருள். - மதுரைக் காஞ்சி - பத்துப்பாடு- மாங்குடி மருதனார்..
Shan: திமில் என்ற சொல் சங்க இலக்கியங்களில் நிறைய இடங்களில் கையாளப்பட்டுள்ளது..
Shan: இதை வைத்து தானோ என்னவோ திமிங்கிலம் என்ற மீனுக்கு பெயர் காரணம் வந்துருக்குமோ..!?
Vinoth: i had the same feeling
Shan: இதில் இன்னொரு சொல் ஆராய்வுக்கு உட்பட்டது..
Shan: “கம்பலை”… கண்ணீரும் கம்பலையுமாக வந்தார்கள் என்று சொல்லுவம்ல..இதில் கம்பலை.</description>
    </item>
    <item>
      <title>திருநெல்வேலி வரலாறு</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/26_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/26_post/</guid>
      <description>திருநெல்வேலி வரலாறு Latha Kumar
கி.பி.1790 செப்டம்பர் 1ல் இம்மாவட்டம் ஆங்கிலோயரால் உருவாக்கப்பட்டது. பிற்கால பாண்டியர்களின் தலைநகராகச் சிறிது காலம் இருந்தது.
வழிபாட்டு இடங்கள்: திருக்குறுங்குடி,சங்கரன்கோவில்,அகஸ்தியர்அருவி,வானமாமலை கோவில்,சொரிமுத்தைய்யன் கோவில்,திருமலைக்கோவில்,நெல்லையப்பர்கோவில்,உவரி சுயம்பு லிங்கசுவாமி,பாளையங்கோட்டை ஊசிக்கோபுரம்,விஸ்வநாதர் கோவில்,குற்றாலநாதர் கோவில்.
பெயர்க்காரணம்: இறைவனுடைய வழிபாட்டிற்க்காக உலர்த்திருந்த நெல்லை,ஊரெங்கும் மழை பொழிய நனையாமல் வேலியிட்டுக் காத்ததால் இப்பெயர் வந்தது.
நெல்லை தமிழ்: தென்பாண்டி சீமை என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும்.[1] இவ்வழக்கை நெல்லை தமிழ் என்றும் அழைப்பர்.
தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை.</description>
    </item>
    <item>
      <title>திருவிழா ஞானம் - 1</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/20_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/20_post/</guid>
      <description>திருவிழா ஞானம்
Swami
&amp;ldquo;ஒன்னு வைச்சா பத்து, பத்து வைச்சா நூறு, நூறு வைச்சா ஆயிரம்..அரிஷ்டம் கொட்டும் ஆட்டம், ஆடாம போனாதான் நட்டம்&amp;rdquo; என திருவிழா பஜாரில் கோவில் ரதவீதியில் கூவிக் கொண்டிருந்தவன் எல்லாரையும் ஈர்த்துக்கொண்டிருந்தான் என்னையும் சேர்த்து.
பாக்கெட்டில் இருந்த நூறுரூபாய் என்னை அவனிடத்தில் கொண்டு போய் விட்டது.
அவன் மூணு சிவப்பு டம்ளரில் ஒன்னுல பச்சை பந்தை வச்சி..மூணையும் கவுத்தி மாத்தி மாத்தி தலை சுத்துற மாதிரி மந்திரித்துவிட்டு எதுல பந்துஇருக்குனு பெட் கட்டச் சொன்னான். நான் கண்ணுல விளக்கெண்ணை போட்டுலா பாத்தேன்.. நடுல உள்ளதுலதான் இருக்கு.
ஒருத்தனும் பெட் கட்டல..
அவன் பீடிய பத்தவைச்சிகிட்டே ஒவ்வொரு டம்ளரா நிமித்தினான்&amp;hellip;நான் நினைச்சது கரெட்டு.</description>
    </item>
    <item>
      <title>திருவிழா ஞானம் - மூன்றாம் நாள்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/23_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/23_post/</guid>
      <description>திருவிழா ஞானம் - மூன்றாம் நாள் காலையிலே கோணாரு பால் கறக்க வரல போல. இல்லைனா எந்திரிக்கும் போது கருப்பட்டி காப்பி வாசம் நாசியில உள்ளபோயி நடு உச்சியிலே சிலுப்பிவிடும். சிக்கிரி கலந்த காப்பிதூளும் திசையன்விளை கருப்பட்டியும் காப்பியை தேடி அலைய வைக்கும். கோணார் வராட்டி நான்தான் போய் மடியில கைவைக்கனும். எலேய் மாட்டுக்கு கழனியும் ரெண்டு வைக்கலையும் போடு நான் போய் பல்லை உடைச்சிட்டு வறேனுட்டு உமிக்கரியையும் உப்பையும் கேலண்டர்ல தேதி கிழிச்ச தாளுல மடிச்சி தெக்க பம்புசெட்டைப்பாத்து போனேன். வாய் கொப்பளிக்கும் போதே இன்னைக்கு என்னலாம் பண்ணனும்னு மனசுக்குள்ள ஓட்டி பாத்துகிட்டேன். பல்லை தேச்சிட்டு கறவை மடில கை வைச்சதிலேருந்து பொழுது சாயுற வரைக்கும் வேலை தலைக்குமேல இருந்ததுல நேரம் போனதே தெரியல.</description>
    </item>
    <item>
      <title>திருவிழா ஞானம் - ரெண்டாம் நாள்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/21_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/21_post/</guid>
      <description>திருவிழா ஞானம் - ரெண்டாம் நாள்
முதல் நாள் திருவிழா தான் முடிஞ்சிருக்கு..இன்னும் ஒன்பது நாள் இருக்கு.
நேத்து ராத்திரி கனவுல பெரிசு திரும்பவும் வந்து பெட்டுல காசு கட்டி ஏமாந்து போகாதீங்களனு சொல்லிட்டு போனது உறுத்திகிட்டே இருக்கு. இன்னைக்கு பெட் கட்ட போகக்கூடாது. நேத்து போயி நூறு ரூவா வெட்டியா போயிட்டுனு மனசுக்குள்ளே நினைச்சிகிட்டே அன்னைய பொழுது கமிஷன் மண்டில மிளகாய் வந்த கணக்கை முடிச்சிட்டு சாயங்காலம் பொழுது சாயவும் ஹெர்குலிஸ் வண்டிய எடுத்துட்டு கிளம்பினேன்.
ஒரு ரவுண்டு சுத்திட்டு தெக்குரதவீதியிலஇருக்கிற செல்வம் மரக்கடையில ஆஸ்பெஸ்டாஸ் சாய்ப்புல சைக்கிள சாத்திட்டு பொடி நடையா திருவிழா கூட்டத்தில ஐக்கியமானேன்.</description>
    </item>
    <item>
      <title>தும்பி</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/27_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/27_post/</guid>
      <description>தும்பி
Tamilvanan
Vinoth: சிறிது விளக்கம் கொடுத்தால் விவாதிக்க பயனுள்ளதாய் இருக்கும்
Vinoth: சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்த விழையாட்டு தும்பி பிடிப்பது. தட்டான் என்று நாங்கள் அழைப்போம். பட்டம் பூச்சி பிடிப்பதும் பட்டு பூச்சி பிடிப்பதும் கூட மிகவும் பிடித்த ஒரு பொழுது போக்கு.
இந்த முறை ஊர் சென்ற பொது பட்டு பூச்சிகளை தேடி பார்த்தேன் ஒன்று கூட கிடைக்க வில்லை. முற்றிலும் அழிந்து விட்டனனோ என்னவோ. மாறாக நிறைய மயில்களை பார்த்தேன். சிறு வயதில் மயில் பார்க்க ஒரே வழி சுவாமிமலை முருகன் கோவில்.
மயில்கள் அதிகமானதால் சில பயிர் வகைகளும் பூச்சிகளும், பாம்பினங்களும் பாதிக்கப்படுவதாக நண்பர்கள் விவாதிக்க கேட்டேன்</description>
    </item>
    <item>
      <title>தேத்தாங்க்கொட்டையை</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/30_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/30_post/</guid>
      <description>தேத்தாங்க்கொட்டையை Shan
Shan: எங்க கிராமத்துல 80-90 கால கட்டத்துல கோடையில் ரொம்ப தண்ணி கஷ்டமா இருக்கும்.. அப்ப குளம் குட்டைல மழை பேஞ்ச தண்ணி கலங்களா கெடக்கும் . அதை தூக்கிட்டு வந்து இந்த தேத்தாங்க்கொட்டையை பானையில போட்டுடுவோம். அடுத்த நாளு தண்ணி சும்மா அப்படி சுத்தமாவும் சுவையாவும் இருக்கும். இப்ப எல்லாம் மினரல் வாட்டர் வண்டில கொண்டு வந்து குடம் 10 ரூ விக்கிறாங்க.. நாங்களும் அத வாங்குறோம்..
Indhira: தேற்றாங் கொட்டையின் ஆங்கில பெயர் என்ன ? Is is available everywhere?
Indhira: அத சொல்லுங்க .. கால போக்குல இந்த மாதிரியான விஷயம் எல்லாம் மறந்து மறைஞ்சு போயிடுமோன்னு கவலை வருது .</description>
    </item>
    <item>
      <title>தேத்தாங்க்கொட்டையை</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/31_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/31_post/</guid>
      <description>தேத்தாங்க்கொட்டையை Shan
Shan: எங்க கிராமத்துல 80-90 கால கட்டத்துல கோடையில் ரொம்ப தண்ணி கஷ்டமா இருக்கும்.. அப்ப குளம் குட்டைல மழை பேஞ்ச தண்ணி கலங்களா கெடக்கும் . அதை தூக்கிட்டு வந்து இந்த தேத்தாங்க்கொட்டையை பானையில போட்டுடுவோம். அடுத்த நாளு தண்ணி சும்மா அப்படி சுத்தமாவும் சுவையாவும் இருக்கும். இப்ப எல்லாம் மினரல் வாட்டர் வண்டில கொண்டு வந்து குடம் 10 ரூ விக்கிறாங்க.. நாங்களும் அத வாங்குறோம்..
Indhira: தேற்றாங் கொட்டையின் ஆங்கில பெயர் என்ன ? Is is available everywhere?
Indhira: அத சொல்லுங்க .. கால போக்குல இந்த மாதிரியான விஷயம் எல்லாம் மறந்து மறைஞ்சு போயிடுமோன்னு கவலை வருது .</description>
    </item>
    <item>
      <title>நடனமும், சமையலும்!</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/32_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/32_post/</guid>
      <description>நடனமும், சமையலும்!
Thamilvanan
&amp;lsquo;வாவ்&amp;rsquo; என்று நீங்கள் வியந்த நடனத்தை ஞாபகப்படுத்துங்கள்! மனமும், உடலும் ஒத்திசைந்து நிகழ்த்தும் அதிசயம் உங்கள் கண் முன் வரும்.
மனம் முழுவதும், உடலின் அசைவுகளில் லயித்தால், நடந்தால் கூட நடனமாகும். அதில் லயம் இருக்கும்.
சமையலும் அப்படித்தான். செய்யும் உணவில் உங்கள் மனம் லயித்தால், வெந்நீர் கூட அமிழ்தம் ஆகும். உங்கள் கை வித்தைகள் செய்கிறது என்று உண்பவர்கள் சொல்வார்கள்.
உடலசைவுகள், கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால், நடனம் சகிக்காது. உப்போ, காரமோ, இனிப்போ கூடினாலும், குறைந்தாலும், சமையல் சகிக்காது.
நடனத்தில் அசையும் உடலுடன், மனமும் அசைகிறது. சமையலில், பொங்கும் பாலுடன் மனமும் பொங்கி வழிகிறது.</description>
    </item>
    <item>
      <title>நம் நாட்டுக் கப்பற்கலை</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/11_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/11_post/</guid>
      <description>புத்தக வாசிப்புத் தொடர் - (மார்ச் வாசிப்பு மாரத்தான்) வாசகரின் பெயர் : லதா குமார்*
வாசகரின் ஊர்/ மாநிலம் : நோவாய்,மிச்சிகன் (Novi MI)
புத்தகத்தின் பெயர்: நம் நாட்டுக் கப்பற்கலை
எழுத்தாளர் : சாத்தன்குளம் அ. இராகவன்
பக்கங்கள் : 422
தமிழர்களின் கப்பற்கலை பற்றிய பல அரிய தகவல்களோடு விளக்கப்படங்களுடன் தமிழில் வெளிவந்த முதலாவது நூல்.
நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் இதை நம் பெருமைக்குரிய கப்பலோட்டிய தமிழர் திரு. வா. உ. சிதம்பரனாருக்கு காணிக்கை ஆக்கியது இதன் மற்றொரு சிறப்பு.
பண்டைக்கால முக்கிய துறைமுகங்கள், இக்கால முக்கிய துறைமுகங்கள், வானியல், விண்ணியல், நீரோட்டம், பருவ நிலை மாற்றங்கள், கட்டுமரம் முதல் கடல் கலங்களின் வகைகள் (வரைப் படங்களுடன்) , அதற்கான மரங்கள், அதன் அமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் பயன்பாடுகள் என முதல் பாகத்திலும்&amp;hellip;</description>
    </item>
    <item>
      <title>நாகர்கோவிலிலிருந்து to மெளன்டன்வியூ</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/36_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/36_post/</guid>
      <description>நாகர்கோவிலிலிருந்து to மெளன்டன்வியூ Raj Uncle
நாகர்கோவிலிலிருந்து மெளன்டன்வியூ வந்து இன்றைக்கு இரண்டு மாதமாகிறது. ஆனால், இருபது வருடங்கள் ஆனதுபோல் மன இறுக்கம். அறுபதே நாளில் எப்படித் தலைகீழாக என் வாழ்க்கை மாறிவிட்டது?
பிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல் ரசவடை, லட்சுமி தியேட்டர் தரை டிக்கெட் சினிமா என்று சிறுவயது வாழ்க்கை. அப்புறம் மணிமேடை ஜங்ஷனில் இருக்கும் போஸ்ட் ஆஃபீசில் கிளார்க் வேலை. மாமா மகள் சரோஜாவோடு கல்யாணம். கறிவேப்பிலைக் கொழுந்தாக மகன் மணி. படிப்பில் படு சுட்டி.</description>
    </item>
    <item>
      <title>நிலை நிறுத்தல்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/14_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/14_post/</guid>
      <description>நிலை நிறுத்தல் கி. ராஜநாராயணன்
Swami
&amp;quot;மூதேய் மூதேய் வெறுவாக்கலங்கெட்ட மூதேய்.” எப்பேர்க் கொத்தி வேலையாளாய் இருந்தாலும் வசவு வாங்காமல் தீராது அவரிடம். இது சாதாரணம்; பெரிய முதலாளிக்கேண்ணு உள்ள கெட்டவார்த்தை வசவுகள் இருக்கு புழுத்தநாய் குறுக்கே போகாது அதைக் கேட்டால். அதோடு எத்தனையோதயா அவரிட்டெ அடியும் வாங்கி இருக்கான் இந்த மாசாணம் பயல்.
ஏசுங்க, எம்புட்டு வேனுமானாலும் ஏசுங்க என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டான் அவன். -
இப்பொ அவன் வாங்கின வசவுக்கு ஒரு காரணமும் கிடையாது. &amp;ldquo;சுண்ணாம்பு எடுத்துட்டுவாலே மாசாணம்&amp;quot;ண்ணாரு எடுத்துட்டு வந்தான்.
ஒரு பிஞ்சு சுண்டைக்காய் அளவுதான் வெத்திலையில்
வைத்துக் கொண்டாரனும்; மஞ்சாடி கூடீரப்படாது, வசவுதான்.</description>
    </item>
    <item>
      <title>படித்ததில் பிடித்தது</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/25_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/25_post/</guid>
      <description> படித்ததில் பிடித்தது Indira
சாதிக்க முடியாத இலக்கை வாழ்க்கை கொடுக்கும்போது அழிக்கவே முடியாத தடயத்தை அந்த வாழ்க்கையில் பதியவைத்துவிட்டு செல்வது தான் திறமையின் சிறப்பு ஆறுதல் ஏதுமின்றி அழுது முடித்த பின்பு வரும் நம்பிக்கைக்கு பலம் சற்று அதிகம் தான் அடுத்த நொடி மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்களே இந்த வாழ்க்கை எந்த நிமிடமும் முடிந்து போகும் அது வரை அன்பை விதைத்து அறுவடை செய் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத வலிகளை எல்லாம்,நம்மால் வெறுக்கவே முடியாத ஒருவரால்தான் கொடுத்திருக்கமுடியும்&amp;hellip; </description>
    </item>
    <item>
      <title>பத்தாயம்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/42_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/42_post/</guid>
      <description>பத்தாயம் Latha Kumar: வாமடை பத்தாயம் விளக்கம் அளிக்க முடியுமா?
Shan: மடை என்பது நீர் போகும் ஒரு வழி என்பது நமக்கு தெரியும். ஏரி குளம் ஆறுகளில் பார்த்து இருப்போம். அதே போல வயலிலும் இரு மடைகள் உள்ளது. நீர் உள்ளே வரும் வழி வாய்மடை . நீர் வெளியேறும் வழி வடிமடை. அந்த வாய்மடை தான் வாமடை என்று எங்க வட்டாரத்தில ( தஞ்சை புதுகை) சொல்லுவோம். அது ஒரு வட்டார வழக்குச் சொல்.. மழைக் காலத்தில்( ஐப்பசி) பெரும் மழை பெய்வதினால் வயலுக்கு நீர் தேவையில்லை. ஒரு வேளை அதிக நீர் வரத்து வாமடை வழியாக வந்தால் வயலின் வரப்புகள் தாங்காமல் உடைப்பு ஏற்ப்படும்.</description>
    </item>
    <item>
      <title>பத்தாயம்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/43_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/43_post/</guid>
      <description>உப்பு Shan
உப்பு பற்றியும் இருக்கும்&amp;hellip;நல்ல களஞ்சியம் அந்த புத்தகம்
Swami: உப்பு சரி&amp;hellip;உப்புமா பத்தி வரலாறு கிடைக்குமா??? 😁
Swami: உப்புமா Dish ..நமது பாரம்பரியமா..இல்லை அயலகத்திலிருந்து தொற்றிக் கொண்டதா?
இரும்பு சட்டியில் செய்த அரிசி உப்புமா..என்னோட Favorite..
உதிரி உதிரியாக ஒட்டாமல் செய்த சேமியா உப்புமா ல..தேங்காய துருவி மேல போட்டு சாப்பிட்டா சிறப்பாக இருக்கும்..
இஞ்சி தூக்கலாக போட்டு பிறு பிறு வென்று வறுத்த வேர்கடலை போட்ட கோதுமை ரவாஉப்புமா..ஒரு Plate fulla வைம்மா னு சொல்லும்&amp;hellip;
உப்புமாவின் வரலாறு தெரிந்தவர்கள் தகவல் கொடுங்கள்.
Shan: சிற(உ)ப்பு!. உண்மையை சொல்லப் போனால் மறைந்த பேரா. திரு தொ.</description>
    </item>
    <item>
      <title>பாரசீக மொழியிலிருந்து</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/18_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/18_post/</guid>
      <description>பாரசீக மொழியிலிருந்து Vinoth
நான் உண்மையான தோற்றத்தை மறந்துவிட்டேன், ஆனால் அது என் குழந்தை பருவத்திலிருந்தே என் மனதில் ஒட்டிக்கொண்டது. இது பாரசீக மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன்
காதலைப் பற்றிய பாடல் வரிகள், ஒரு பையன் ஒரு பெண்ணிடம் தன் காதலைப் பற்றி விளக்குவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது
அவன் அன்பு பணம் போன்றதா? பின்னர் பணம் கைமாறு என்று கூறி நிராகரிக்கிறார்
அப்போது அவன் கேட்கிறான் அவனுடைய காதல் நிலவு போன்றதா? இல்லை அது குறைந்து கொண்டே செல்லும் மற்றும் மறைந்து மீண்டும் மீண்டும் வளரும்
அது தண்ணீர் போன்றதா? அவை ஆவியாகி மீண்டும் விழும்</description>
    </item>
    <item>
      <title>பாலங்கள் 1983</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/6_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/6_post/</guid>
      <description>புத்தக வாசிப்புத் தொடர் - (மார்ச் வாசிப்பு மாரத்தான்) வாசகரின் பெயர்: லதா குமார்
வாசகரின் ஊர்/ மாநிலம்: நோவாய்,மிச்சிகன் (Novi MI)
புத்தகத்தின் பெயர்: பாலங்கள் 1983
எழுத்தாளர்: சிவசங்கரி
பக்கங்கள்: 172
பாலங்கள்: 1983 &amp;lsquo;கஸ்தூரி ஸ்ரீனிவாசன்&amp;rsquo; விருது மற்றும் பத்தாயிரம் ரூபாய் பரிசு பெற்ற நாவல்.
1983 ல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இந்த நாவல் இன்றும், என்றும் பேசப்படுகிற, ஆவணப்படுத்தப்பட வேண்டிய அரியதொரு கதை.
இந்த நாவலில் 1907 முதல் 1998 வரை பிராம்மண சமூகத்தில் ஏற்பட்ட சம்பிரதாய உருமாற்றத்தினை படிப்படியாக விவரித்து சொல்கிறார்.
இந்தக் கதை மூன்று காலகட்டங்களில் நடக்கும் (1907 - 1931, 1950- 1964, 1965 - 1985 கடைசியாக 1998) மூன்று விதமான கதைகள் கொண்டது.</description>
    </item>
    <item>
      <title>போரும், போர் நிகழ்ச்சிகளும்...!</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/34_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/34_post/</guid>
      <description>போரும், போர் நிகழ்ச்சிகளும்&amp;hellip;! Shan
கரிகாலன் பகைவர் நாடுகளைக் கைப்பற்றினான், அவன் கைப்பற்றிய ஊர்களில் மதில்கள் அழிந்தன. கூகைகள் இருந்து குழறின என்று #பட்டினப்பாலை கூறுகின்றது.
படையெடுக்கும் அரசனைச் சேர்ந்த வீரர்கள் பகைவர் நாட்டு ஊர்களைக் கொளுத்துதல் வழக்கம்; கோட்டைகளை இடிப்பது வழக்கம்; இந்த அழிவுகளை எல்லாம் #புறநானூறு பாடல்களில் காணலாம்.
பிற்கால அழிவுகளைக் #கலிங்கத்துப்பரணி பாடல்களில் விரிவாகக் காணலாம். &amp;ldquo;நீ படையெடுத்தால் பகைவர் நாடு அழிவுறுமே&amp;rdquo; என்று புலவர்கள் வருந்திப் பாடிய பாடல்கள் பல. இத்தகைய பாடல்கள் #கொற்றவள்ளை என்று பெயர் பெறும்.
அரசனது தலைநகரில் கட்டடங்கள் இடிக்கப்படும்; அந்த நிலம் கழுதைகளால் உழப்படும்: கவடி விதைக்கப்படும். வென்ற அரசர், வெல்லப்பட்ட நாட்டுக் குளங்களில் தம் போர் யானைகளை நீராட்டுவர்; வென்ற நாட்டில் தங்கள் வெற்றித் தூண்களை நாட்டுவர் அல்லது தங்கள் இலச்சினையைப் பொறிப்பர்.</description>
    </item>
    <item>
      <title>மஞ்ஞை</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/22_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/22_post/</guid>
      <description>மஞ்ஞை Shan
Shan:
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் குன்ற நாடன் கேண்மை என்றும் நன்றுமன் வாழி தோழி! உண்கண் நீரொடு ஓராங்குத் தணப்ப, உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே. (கபிலர் - குறுந்தொகை)
Shan: தோழி! நீ வாழ்க! காட்டிலுள்ள மயில் பாறையில் ஈன்ற முட்டைகளை, வெயிலில் விளையாடும் குரங்குக் குட்டிகள் உருட்டும் இடமாகிய, மலைநாட்டையுடையவனாகிய தலைவனது நட்பு என்றும் பெருமைக்குரியது. ஆனால், அவன் என்னைவிட்டுப் பிரிந்ததால், மை தீட்டிய என் கண்களிலிருந்து நீர் பெருகுகின்றன. அந்தப் பிரிவை நினைத்து ஒரேயடியாக வருந்தாமல், பொறுத்துக்கொள்ளும் ஆற்றல், மனதில் வலிமை உடையவர்களுக்கு மட்டுமே இருக்கும்.</description>
    </item>
    <item>
      <title>மிளகாய்</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/41_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/41_post/</guid>
      <description>மிளகாய் Shan
மிளகாய் தமிழ் நாட்டிற்கு வந்தது சிலி நாட்டில் இருந்து காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும்.
கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ் நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காகக் கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே &amp;lsquo;கறி&amp;rsquo; எனப் வழங்கப்பட்டது. பின்னர் வெள்ளை மிளகினைத் (வால்மிளகு) தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர்.
#அறியப்படாத_தமிழகம்</description>
    </item>
    <item>
      <title>முதல் வரைவு</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/my-first-post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/my-first-post/</guid>
      <description>தமிழ் மகிழ் மன்றம் முதல் வரைவு , சண்முகராஜன்
(காலம்: கொஞ்சம் தே நீர் நிறையப் பேச்சு மாதமிருமுறை)
(எல்லை: மத இன அரசியலால் மற்றவர் மனம் கோணாமல்)
பத்துக்குப் பத்தாக புத்தகப் பரிந்துரை
எழுத்தளார் அறிமுகம்
ரசித்த புதினம்
ரசித்த சிறுகதை
ரசித்த /இயற்றிய கவிதை
படித்ததில் பிடித்தது
உன்னத உலகத் திரைப்படம்/குறும்படம்
சங்க/சம கால இலக்கியம்
பிடித்த உணவு / உணவகம்
பயணம்</description>
    </item>
    <item>
      <title>வீரயுக நாயகன் வேள்பாரி</title>
      <link>https://kazhalgal.silambu.us/posts/13_post/</link>
      <pubDate>Wed, 26 Jul 2023 16:49:12 +0000</pubDate>
      <guid>https://kazhalgal.silambu.us/posts/13_post/</guid>
      <description>வீரயுக நாயகன் வேள்பாரி Thamilvanan ஒரு நாவல் நம்மை என்ன செய்து விட முடியும்? நம் எண்ணத்தை மற்றும், முற்போக்கு சிந்தனை தூண்டிவிடும், புரிதலை சீர்மையாக்கும், சமத்துவம் என்பது ஆண் மற்றும் பெண்ணில் தேடுவதோடு நிறுத்தாமல் பார்க்கும் இடமேல்லாம் நம் பார்வையை மேம்படுத்தும்.
Latha Kumar: 🤔
Thamilvanan: People says its another Ponniyan Selvan. But its beyond that in Tamil. The writing style is so good. I had read this book when it got released in Anand Vikatan in weekly magazine
Thamilvanan: இவை அனைத்தும் நான் ஒரு நாவலில் அறிந்தேன்.</description>
    </item>
  </channel>
</rss>
